பீஷ்மா!!

Posted by மௌனமான நேரம் Monday, 24 August 2009

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் இந்த பீரங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பீஷ்மா கவச வாகனம் 2004 - ம் ஆண்டு ராணுவத்திடம் வழங்கப்பட்டது.

பீஷ்மா பீரங்கிகள் "டி - 90' வகையைச் சேர்ந்தவை. பாதுகாப்பு, வாகன ஓட்டம், போரிடும் திறன்கள் உள்ளிட்டவற்றில் நவீனம் புகுத்தப்பட்டுள்ளது. இந்த பீஷ்மா பீரங்கிகள் ஓரே குழலைப் பயன்படுத்தி வெடிபொருள்களைச் சுடுவதுடன், நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணையை சரியாகத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

இரவு நேரத்தில் போரிடுவதற்கு வசதியாக புதிய கருவிகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் பரிமாற்றத்துக்கான ரேடியோ கருவிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ரசாயன, உயிரியியல் மற்றும் அணுக்கதிர் வீச்சு தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய அதிநவீன அம்சங்களும் இதில் உள்ளன.

இந்த ரக பீரங்கிகள் 35 ஆண்டுகள் வரை திறமையாகச் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இப்போது பத்து பீரங்கிகளை ராணுவத்திடம் வழங்கியுள்ளது. ஆண்டொன்றுக்கு 100 பீஷ்மா பீரங்கிகளை தயாரிக்க கனரக வாகன தொழிற்சாலை திட்டமிட்டுள்ளது. இதற்கான மொத்தச் செலவு ரூ.15 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஆவடி எச்விஎப் தொழிற்சாலை, விஜயந்தா, அஜய், அர்ஜுன் என பல வகையான நவீன பீரங்கிகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..



0 பின்னூட்டங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


Widget By Devils Workshop

வேளாண் ஆராய்ச்சியின் பரிணாம வளர்ச்சியாக கருதப்படும் பி.டி. கத்தரிக்காய் வேண்டுமா, வேண்டாமா?

முந்தைய பதிவுகள்