மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் 65-வது பிறந்த நாள் வியாழக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
டெல்லி வீர பூமியில் அமைந்துள்ள ராஜீவ் சமாதியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவரும் ராஜீவ் காந்தி மனைவியுமான சோனியா காந்தி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். மகன் ராகுல், மகள் பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதரா ஆகியோரும் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மக்களவைத் தலைவர் மீரா குமார், தில்லி துணைநிலை ஆளுநர் தேஜெந்திர கன்னா, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் மூத்த தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் நினைவிடம் வெள்ளைத் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஏழை மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் பிறந்த நாளை கொண்டாடினர்.
கோட்டை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் கருணாநிதி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.











0 பின்னூட்டங்கள்