உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை மியாட்மருத்துவ மனையில் “மோட்” என்ற பெயரில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.விழாவில் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"....என் மனைவி உடல் உறுப்புகளை முதன் முதலாக தானம் செய்தார். அவரை மனைவியாக அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். பொதுவாக ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருக்கிறார். எனது மனைவியின் வழியில் நானும் எனது உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்....."
முதலில் துர்கா ஸ்டாலின், உடல் உறுப்புகளை தனது வாழ்க்கைக்கு பிறகு அளிப்பதான உறுதிமொழி பத்திரம் மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
அதை தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினும், தனது உடல் உறுப்பினர்களை தானம் செய்வதாக அறிவித்தார். அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.
அதை தொடர்ந்து துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலினும், தனது உடல் உறுப்பினர்களை தானம் செய்வதாக அறிவித்தார். அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து 1500 பேர் உறுப்புகள் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.
வரவேற்கும் படியான ஒன்று...
நன்றி!!











0 பின்னூட்டங்கள்