கஜினி ?? -கதை

Posted by மௌனமான நேரம் Wednesday, 27 May 2009


ஆதவனுக்கு மனது பட பட வென்று அடித்து கொண்டது. இது மூன்றாவது முறை.
முதல் முறை மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்தது!

பொன்னி அவன் மாமன் மகள். அவன் கண்ணுக்கு ஒரு பேரழகி. நிறைய கனவு கண்டு, டூயட் பாடி, மறைந்திருந்து பார்த்து, சொல்ல போய் மறந்து, கடைசியில் ஒரு வழியாக சொல்லி விட்டான். பொன்னி சொன்னாள் ' நான் இன்னும் நிறைய படிக்கணும் ஆதவா! '


இரண்டாம் முறை 2 வருடங்களுக்கு முன் நடந்தது!


செல்வி அவனுடன் படித்தவள். அவன் கண்ணுக்கு உலக அழகி. தத்தி தடுமாறி அப்படி இப்படியென்று கடைசியில் சொல்லி விட்டான். செல்வி சொன்னாள், 'சாரி ஆதவா! நான் என் அத்தை பையனை லவ் பண்ணறேன்.'


ஷாலினி யை 5 மாதங்களாக அவனுக்கு தெரியும். நல்ல நண்பர்கள். அவனுடைய பழைய காதல் பற்றி கூட சொல்லியிருக்கிறான்.நல்ல வேலை பொன்னியும் செல்வியும் அழகு என்று ஏமாந்து போகவில்லை என்று கூட கிண்டல் பண்ணியிருக்கிறான். உண்மை தான் இப்போஅவர்கள் எல்லாம் அவனுக்கு அழகாக தோன்ற வில்லை.


அது போகட்டும். பழக பழக ஷாலினியை பிடித்து போனதும், அவள் இல்லாமல் வாழ முடியாது என்பதையும் அவளிடம் சொல்லி விட வேண்டும்


ஷாலினி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் முகமெல்லாம் சந்தோசம்.


ஆதவன்: ஷாலினி! உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.


ஷாலினி: சொல்லேன்.


ஆ: நான்... ம்ம்ம் வந்து... நான்...


ஷா:நீ ஏற்கனவே வந்துட்டியே!


ஆ: அதில்லை .. நான் சொல்லணும்.


ஷா: சொல்லணும்ங்கரத தவிர வேற எதாவது சொல்லணுமா :)


ஆ: அது.. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்..


ஷா: (அமைதியாக பார்த்து..) இப்போ தான் அப்பா போன் பண்ணினாங்க. கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்களாம் .என் இஷ்டப்படியே சதிஷ் கூட கல்யாணம்.


ஆ: ஒ.. ஆல் தி பெஸ்ட்! பை !


ஆதவன் பயணம் தொடரும்....




1 பின்னூட்டங்கள் - கஜினி ?? -கதை

  1. கடைக்குட்டி சொன்னது:
  2. யாருங்க இந்த இதயம் முரளி ???

    இது உண்மைக் கதையோ ???

     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


Widget By Devils Workshop